இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைத்துறையில் உயர்தர மாணவர்களால் எவ்வாறு பாடங்கள் தெரிவு செய்தல் வேண்டும்

படம்
  மாணவர்களுக்கு பிரதானமாக நான்கு துறைகளில் / வகைபாடுகளின் படி பாடங்களை தெரிவு செய்யலாம். 1 - சமூக விஞ்ஞானப்பாடங்கள் (பொருளியல், புவியியல், அரசியல் விஞ்ஞானம், வரலாறு, மனைப் பொருளியல், தொடர்பாடலும் ஊடக கற்கை) இவற்றில் 3 பாடங்கள்/2 பாடங்கள்/ ஒரு பாடத்தை தெரிவு செய்யலாம். அதிக வெட்டுப்புள்ளிகளை கொண்ட பாடங்களாக இவை காணப்படுகின்றமை இங்கு அவதானிக்கத்தக்கது. 2 - சமயங்கள்/நாகரீகங்கள் (பௌத்தம், இந்து,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்) (பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரீகங்கள்) நாகரீகங்களை கொண்ட பாடங்கள் அதிக வெட்டுப்புள்ளிகளைக் கொண்ட பாடங்களாகும். ஒரு சமய பாடத்தை தெரிவு செய்தால் அதே சமய பாடத்தின் நாகரீக பாடத்தை தெரிவு செய்ய முடியாது. உ+ம் - பௌத்த சமயம் + பௌத்த நாகரீகம் 3 - அழகியட்கலை பாடங்கள் நடனம் - சிங்களம், பரதம் சங்கீதம் - கீழையத்தேய,கர்நாடக,மேலையத்தேய சங்கீதங்கள். அரங்கியல் - சிங்களம், தமிழ், ஆங்கிலம் இவ்வகைப்பாடில் ஆகக்கூடியதாக இரு பாடங்களையே தெரிவு செய்தல் வேண்டும். 4 - மொழிகள் தேசிய மொழிகள் 1) சிங்களம் 2) தமிழ் 3) ஆங்கிலம் சாஸ்திரிய மொழிகள் அரபு பாலி சமஸ்கிரதம் வெளிநாட்டு மொழிகள்...

பல்தேர்வு வினாக்கள்(MCQ) செய்வதற்கான இலகு வழி முறைகள்

படம்
கலைப்பிரிவில் உயர் தரத்தில் புவியியல் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பாடங்களில் உயர்தர பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான சில தந்திரோபாய திட்டங்கள் பற்றிய விளக்கம் பின்வருமாறு தரப்பட்டுள்ளன. அவற்றில் பிரதானமாக ஆறு வழிமுறைகளை இங்கு அவதானிப்போம். இரு பாடங்களுக்குமான வினாத்தாள் பற்றிய பூரணமான விளக்கம் ஒன்று தேவைப்படுவதால் மாணவர்கள் அவசியம் வினாத்தாள் பற்றிய கட்டமைப்பு தெரிந்திருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் எதனைப் படிக்க வேண்டும், எவ்வாறு படிக்க வேண்டும், எவ்வகையான கேள்விகள் பரிட்சையில் கேட்கக் கூடும், அதற்கு எவ்வாறான  சிறப்புமிகு விடைகளை  எழுத முடியும் முதலான தெளிவினை பெற்றுக்கொள்ளமுடியும். அடுத்ததாக ஒவ்வொரு பாடம் தொடர்பான பல்தேர்வு வினாக்கள் தொகுத்தல் வேண்டும். இதற்காக கடந்தகால பரீட்சை வினாத்தாள்,  தவணை பரீட்சை மற்றும் மாதிரி பரீட்சை முதலான பரீட்சைகளின் வினாத்தாள்களை வைத்து ஒப்பிடுவது, மேலும் ஒவ்வொரு பாடம் சம்பந்தப்பட்ட வினாக்களை அப் பாடங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தல் வேண்டும். இன்னும் பல்தேர்வு வினாக்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கியும் இப்பயிற்சிகளை அதிக அதிகமாக மேற்கொள்ளலாம். உ...

அரசியலின் அறிமுகம், அரசியலாய்வு மற்றும் அணுமுறைகள்

படம்
    அரசியலை விளங்கிக்கொள்ளல்  ஏனையோறுடன் சேரந்து சமூதாயமாக வாழத் தொடங்கியதுடனே அவனோடு அரசியலும் பிறந்து விட்டது.    இதன் விளைவாக அரசியலும் மனித வாழ்வின் ஒரு பிரதான அங்கமாக மாறிவிட்டது    அனைத்து மனிதர்களும் ஏதாவதொரு அரசினுல் பிறக்கின்றனர். அதனால் ஒவ்வொரு மனிதன் ஏதாவதொரு வழிமுறையில் அரசுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டு வாழ்கின்றனர்.    வேறுவகையில் கூறின் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ அரசினுல் தொடர்ப்புட்டவனாக திகழ்வதுடன், அந்நிலை அன்னியோன்னிய மற்றும் விடுவிக்க முடியாத ஒரு தொடர்பினை வைத்துவிடுகின்றான். இதனாலயே அரிஸ்டோட்டில் பின்வருமாறு கூறினார்   “மனிதன் பிறப்பிலே அரசியல் விலங்காவான்."  இந்த தொடர்பின் இயல்பினை எல்லா பிரசைகளும் அறிந்திருத்தல் அவசியமாகும். அந்தவகையில் அரசறிவியலை கற்கும் மாணவர்களும் இதனை கற்பது அவசியமாகும்.    எல்லா மக்களின் சமூக வாழ்க்கையில் தொடர்புபடும் பிரதான அங்கமாக திகழும் அரசியலை கற்பதே அரசறிவியல் என எளிமையாக கூறலாம்.  அரசியலை பயிலும் அரசறிவியலானது மிக நீண்ட வரல...